நாமக்கல்லில் வரும் 7ம் தேதி நுகர்வோர் குறைதீர் கூட்டம்
Grievance Committee -நாமக்கல்லில் வரும் 7ம் தேதி நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் ஸ்ரயோசிங் தெரிவித்துள்ளார்.
Grievance Committee -இதுகுறித்து கலெக்டர் ஸ்ரயோசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
நாமக்கல் மாவட்டத்தில் நுகர்வோர் நலன் கருதி, அனைத்து துறையின் முதல்நிலை அலுவலர்கள், தன்னார்வ நுகர்வோர் அமைப்புகள் ஆகியோர்களுடன் காலாண்டு நுகர்வோர் குறைதீர் கூட்டம், வருகிற 7ம் தேதி காலை 10 மணிக்கு, நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. கலெக்டர் ஸ்ரேயாசிங் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து நுகர்வோரின் குறைகளை கேட்டறிகிறார். பொது விநியோகத்திட்டம் தொடர்பான கோரிக்கைகளைத் தெரிவிக்க விரும்பும் நுகர்வோர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு மனுக்களை அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2