கேம்பிரிட்ஜ் பாடத்திட்டத்தில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா

நாமக்கல் நேசனல் பப்ளிக் பள்ளியில் கேம்பிரிட்ஜ் பாடத்திட்டத்தின்கீழ் படித்து சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா.

Update: 2022-06-18 11:30 GMT

நாமக்கல் நேசனல் பப்ளிக் பள்ளியில், கேம்பிரிட்ஜ் பாடத்திட்டத்தின்கீழ் படித்து சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு, பள்ளி சேர்மன் சரவணன் பரிசு வழங்கி பாராட்டினார்.

நாமக்கல் நேசனல் பப்ளிக் பள்ளியில் கேம்பிரிட்ஜ் பாடத்திட்டத்தின்கீழ் படித்து சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

நேசனல் பப்ளிக் பள்ளியில் 2021-22ஆம் கல்வியாண்டிற்கான கேம்பிரிட்ஜ் பாடத்திட்டத்தில் 34 பிரிவுகளின் கீழ் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா பள்ளியில் நடைபெற்றது. பள்ளி சேர்மன் சரவணன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, இரண்டாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படித்து சிறப்பிடம் பெற்ற மாணவர்களில் வகுப்பிற்கு ஒருவர் வீதம் 4 மாணவர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். பள்ளி முதல்வர், ஒருங்கிணைப்பாளர் மற்றும் ஆசிரியர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். 

Tags:    

Similar News