நாமக்கல்லில் ஏஐஎம்டிசி தலைவர் செங்கோடன் நினைவஞ்சலி நிகழ்ச்சி

நாமக்கல்லில் அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் தலைவர் செங்கோடன் நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2021-10-18 05:30 GMT

நாமக்கல்லில் செங்கோடனின் உருவச்சிலைக்கு நாமக்கல் தாலுக்கா லாரி சங்கங்களின் சார்பில் அதன் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் தலைவராகவும், மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவராகவும், நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்க தலைவராகவும் பணியாற்றி வந்த செங்கோடன் கடந்த 2008ம் ஆண்டு காலமானார். அவரது 13வது நினைவு நாளை முன்னிட்டு நாமக்கல் லாரி உரிமையாளர்கள் சங்க கட்டிடத்தில் நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.

மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவரும், நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்க தலைவருமான வாங்கிலி நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார்.

சங்க உதவி தலைவர் சுப்புரத்திணம், துணைத்தலைவர் பாலச்சந்திரன், செயலாளர் அருள், பொருளாளர் சீரங்கன், ட்ரெய்லர் உரிமையாளர்கள் சங்க செயலாளர் ராஜா, சதர்ன் ரீஜன் எல்பிஜி டேங்கர் உரிமையாளர்கள் சங்க தலைவர் நடராஜன், செயலாளர் மோகன், பொருளாளர் அம்மையப்பன், ஆட்டோ நகர் சங்கத்தலைவர் பழனிசாமி, லாரி உரிமையாளர்கள் சங்க முன்னாள் செயலாளர் சுப்பிரமணி, பிஎஸ்ஏ டிரான்ஸ்போர்ட் அருள்ராஜ் உள்ளிட்ட பலர் செங்கோடன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

Tags:    

Similar News