புதுச்சத்திரம் பிடிஓ அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை

புதுச்சத்திரம் பிடிஓ அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.

Update: 2021-12-29 15:00 GMT

நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில்,  டிரைவராக பணியாற்றி வருபவர் பிரபாகரன். இவர் புதுச்சத்திரம் பகுதியில், தனியாருக்கு சொந்தமான விவசாய நிலங்களில் குழாய் கிணறு அமைப்பதற்கு அனுமதி பெறுவதற்காக லஞ்சம் பெற்று,  அதனை அதிகாரிகளுக்கு தருவதாக புகார் வந்தது.

அதன் அடிப்படையில் இன்று காலை,  10.30 மணியளவில் நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார், புதுச்சத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு சென்றனர். தொடர்ந்து அங்கு தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அங்குள்ள வட்டார வளர்ச்சி அலுவலர் அறை, கிராம ஊராட்சி அலுவலர் மற் றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர், பிடிஓ அலுவலகம் ஆகிய இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். சோதனை முடிவில் அங்கு கைப்பற்றப்பட்டுள்ள பணம் மற்றும் ஆவணங்கள் விவரம் தெரியவரும்.

Tags:    

Similar News