மதுரையில் வருமுன் காப்போம் மருத்துவ முகாம்: அமைச்சர் மூர்த்தி தொடக்கம்
மதுரை அருகே வரிச்சூரியூரில் வரும் முன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நடத்தப்பட்டது
மதுரை அருகே வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது
மதுரை மாவட்டம் ,கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வரிச்சியூர் ஊராட்சியில், அரசு பள்ளியில் நடைபெற்ற வரும்முன் காப்போம் திட்டத்தின் கீழ் மருத்துவ முகாமில், பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, கொரோனா தடுப்பூசி 3வது தவனையை போட்டுக் கொண்டு, பரிசோதனை செய்து கொண்டார். மாவட்ட ஆட்சித்தலைவர் அனிஷ்சேகர், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன்,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன், மாவட்ட ஊராட்சித் தலைவர் ஆகியோர் உடன் உள்ளனர் .