பிரதமர் யார் என ஸ்டாலின் தீர்மானிப்பார்: அமைச்சர் செந்தில் பாலாஜி

உள்ளாட்சித் தேர்தலுக்கு பிறகு மக்களவைத் தேர்தலிலும் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் செயல் வீரர்கள் கூட்டத்தில் பேச்சு.

Update: 2021-12-20 09:15 GMT

கரூரில் இன்று நடைபெற்ற திமுக செயல்வீரர்கள் கூட்டம்

உள்ளாட்சித் தேர்தலுக்கு பிறகு வரக்கூடிய மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்று இந்தியாவின் அடுத்த பிரதமர் யார்? என்பதை நிர்ணயிக்கக்கூடிய சக்தியாக முதல்வர் ஸ்டாலினை உருவாக்க வேண்டும் என கரூரில் நடைபெற்ற மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி கேட்டுக்கொண்டுள்ளார்.

கரூரில் உள்ள தனியார் மண்டபத்தில் மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.   கூட்டத்திற்கு தலைமை வகித்த மாவட்ட பொறுப்பாளரும், தமிழக மின்சாரத்துறை அமைச்சருமான செந்தில்பாலாஜி கூறியதாவது:

கரூர் மாவட்டத்தில் உள்ள மொத்த வாக்காளர்களில் மூன்றில் ஒரு பங்கு திமுக உறுப்பினராக சேர்க்க வேண்டும். முழுமனதோடு அர்ப்பணிப்போடு செயல்பட வேண்டும். மாநகராட்சி, நகராட்சி பேரூராட்சி உள்ளிட்ட பகுதிகளில் பூத் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது இதில் ஒவ்வொரு வாக்கும் முக்கியமாகும். வாக்காளர்களின் ஒவ்வொரு கோரிக்கையும் முக்கியமாகும். திமுகவிற்கு மக்கள் வாக்களிக்க தயாராக உள்ளனர். 

குறிப்பாக புதிய உறுப்பினராக சேர்க்கப்படுவார்கள் யாரையும் கட்டாயப்படுத்தி சேர்க்கக்கூடாது. முழு விருப்பத்தோடு அவர்களை உறுப்பினராக சேர்த்தால் தான் அது திமுகவிற்கு வாக்காக மாறும் உள்ளாட்சித் தேர்தலுக்கு பிறகு மக்களவை தேர்தல் வர உள்ளது. பாண்டிச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற வேண்டும். இந்தியாவில் அடுத்த பிரதமரை உருவாக்க கூடிய சக்தியாக ஸ்டாலினை உருவாக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். அதற்கு தொண்டர்கள் ஆகிய நாம் முழுமனதோடு செயல்பட வேண்டும் என்றார்.

Tags:    

Similar News