கரூர் தொகுதியில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரி சோதனை நடத்தி வருகின்றனர்.
காவிரி ஆறு பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளரும், கரூர் மங்கி காட்டன்ஸ் உரிமையாளருமான ராஜேஷ் கண்ணன் இவர் கரூர் சட்டப்பேரவை தொகுதியில் குப்பை கூடை சின்னத்தில் சுயேச்சையாக போட்டியிடுகிறார். இந்த நிலையில், கரூர் எம்.ஜி சாலையில் உள்ள அவரது மங்கி காட்டன்ஸ் நிறுவனத்தில் வருமானவரி துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கோவை மற்றும் கரூர் மாவட்டத்திலிருந்து பத்துக்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.