ஈரோடு மத்திய மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2022-12-19 07:56 GMT

ஈரோடு மத்திய மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின்  நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும், திருமண உதவி தொகை திட்டத்தை மறுபரிசீலனை செய்து மீண்டும் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க என தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மத்திய மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஈரோட்டில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநகர் மாவட்ட தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் விடியல் சேகர், துணைத்தலைவர் ஆறுமுகம், செயற்குழு உறுப்பினர் சந்திரசேகர், இளைஞர் அணி தலைவர் யுவராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, வீட்டு வரி உயர்வு ஆகியவற்றை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும். திருமணமாகும் ஏழை, எளிய பெண்களுக்கு அரசு வழங்கி வந்த திருமண உதவி தொகையை மறுபரிசீலனை செய்து மீண்டும் வழங்க வேண்டும்.. அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் பல்வேறு திட்டப் பணிகளுக்காக தோண்டப்பட்ட சாலைகளை அமைத்து புதிய தார் சாலை அமைக்க வேண்டும்.

மேலும், மத்திய அரசின் சார்பில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் ரூ.6 ஆயிரம் உதவித்தொகையை விவசாயிகள் தொடர்ந்து பெறும் வகையில் ஆதார் எண்களை இணைக்க விவசாய சங்கம், வருவாய் துறை, வேளாண் துறை சேர்ந்து சிறப்பு முகாம் நடத்த வேண்டும். வருகிற  டிசம்பர் 28 ஆம் தேதி தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனின் பிறந்த நாளை கட்சியின் சார்பில் சிறப்பாக கொண்டாடுவது. நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு அதிக இடங்களை கூட்டணியில் கேட்டு பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில் மாநில அரசியல் உயர்மட்டக்குழு உறுப்பினர் கவுதமன், விவசாய அணி மாவட்ட தலைவர் சம்பத்குமார். மண்டல தலைவர்கள் சீரமணியன், சின்னுசாமி, வட்டார தலைவர்கள் புவனேஸ்வரன், பழனிசாமி, வடக்கு மாவட்ட தலைவர் விஜய் சேமலை, செய்தி தொடர்பாளர் சுரேஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News