/* */

வங்கியில் மாதச்சம்பளத்துடன் தவறுதலாக விழுந்த ரூ.1.42 கோடியுடன் ஊழியர் ஓட்டம்..!

மாத ஊதியத்துடன் சேர்த்து, தவறுதலாக ரூ.1.42 கோடி தனது வங்கிக்கணக்கில் விழுந்ததால், மகிழ்ச்சியில் மூழ்கிய கல்வி நிறுவன ஊழியர் அதனை எடுத்துகொண்டு ஓட்டம் பிடித்தார்.

HIGHLIGHTS

வங்கியில் மாதச்சம்பளத்துடன் தவறுதலாக விழுந்த ரூ.1.42 கோடியுடன் ஊழியர் ஓட்டம்..!
X

இந்த ருசிகர சம்பவம் சிலி நாட்டில் தான் நிகழ்ந்துள்ளது. சிலி நாட்டைத் சேர்ந்த தனியார் நிறுவனம், தங்கள் ஊழியர்களுக்கு வழக்கம் போல் மாத சம்பளத்தை போட்டது. அதில் ஒரு ஊழியருக்கு மாத சம்பளம் இந்திய மதிப்பில் 40 ஆயிரம் ரூபாய் செலுத்தியிருக்க வேண்டும். ஆனால், அந்நிறுவனம் சம்பந்தப்பட்ட அலுவலரின் கவனக்குறைவாகவோ, தவறுதலாகவோ அந்த ஊழியர் கணக்கில் இந்திய மதிப்பில் ரூ.1.42 கோடி ரூபாயை செலுத்தி விட்டது. அதாவது, இது அவருடைய 286 மாத சம்பளம் ஆகும்.

ஊழியருக்கு விஷயத்தை கூறிய நிறுவனம் தவறுதலாக செலுத்திய பணத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளது. ஆனால், மழுப்பலாக பதில் கூறி தாமதப்படுத்தி வந்த ஊழியர் அனைத்துப்பணத்தையும் வாரி சுருட்டிக்கொண்டு தலைமறைவாகி விட்டார். இதையடுத்து காவல்துறையில் புகார் அளித்துள்ள நிறுவனம் மண்டையைப்பிய்த்து கொண்டு காத்திருக்கிறது.

Updated On: 30 Jun 2022 4:41 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...