/* */

நுகா்வோா் கூட்டுறவு பண்டகசாலை சாா்பில் பட்டாசு விற்பனை தொடக்க விழா

திருவண்ணாமலை மாவட்ட நுகா்வோா் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை சாா்பில் பட்டாசு விற்பனை தொடக்க விழா நடைபெற்றது.

HIGHLIGHTS

நுகா்வோா் கூட்டுறவு பண்டகசாலை சாா்பில் பட்டாசு விற்பனை தொடக்க விழா
X

கூட்டுறவு அங்காடியில் பட்டாசு விற்பனையை துவக்கி வைத்த மாவட்ட ஆட்சியர் முருகேஷ்

திருவண்ணாமலை மாவட்ட நுகா்வோா் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை சாா்பில், தீபாவளிப் பண்டிகையையொட்டி பட்டாசு விற்பனை தொடக்க விழா நடைபெற்றது.

திருவண்ணாமலை துராபலித் தெருவில் உள்ள பட்டாசு விற்பனை நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் நடராசன் தலைமை வகித்தாா்.

துணைப் பதிவாளா் (பொது விநியோகத் திட்டம்) ராஜசேகரன் முன்னிலை வகித்தாா். மாவட்ட ஆட்சியா் முருகேஷ் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு தீபாவளிப் பட்டாசு விற்பனையைத் தொடங்கி வைத்துப் பேசுகையில்,

இங்கு விற்கப்படும் பட்டாசுகள் விலை மலிவாகவும், தரம் உயர்ந்ததாகவும் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது . இந்த கூட்டுறவு அங்காடியில் மக்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப பட்டாசை நேரடியாக எடுத்துக் கொள்ளும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தை பொருத்தவரை 14 இடங்களில் சுமார் 65 லட்சம் ரூபாய் அளவிற்கு பட்டாசு கொள்முதல் செய்திருப்பதாகவும் சந்தை விலையை விட பட்டாசு விலை குறைவாக இருப்பதால் அதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.

இந்த கூட்டுறவு பட்டாசு அங்காடியில் கிப்ட் பாக்ஸ் ரூபாய் 450 முதல் 1865 மதிப்பு வரை விற்பனைக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு புதிய வகை பட்டாசுகளாக சாக்லேட் கேண்டில், அனிமல் ஷோயர், டெம்பிள் ரன், டைனோசர், பாய்ஸ் அண்ட் கேர்ள்ஸ் என பல வகைப்பட்ட பட்டாசுகள் விற்பனைக்கு உள்ளது. மேலும் ஸ்டாண்டா்ட்டு, இரட்டைக் கிளி பட்டாசுகள் கொள்முதல் செய்து விற்பனைக்குத் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கத் துணை பதிவாளர்கள், பொது விநியோகத் திட்ட கூட்டுறவு துறை பணியாளர்கள், மேலாண்மை இயக்குனர்கள், திருவண்ணாமலை மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை மற்றும் பண்டகசாலை பணியாளர்கள் கலந்து கொண்டனர்

Updated On: 7 Nov 2023 3:45 AM GMT

Related News