/* */

போலீஸ் ஸ்டேஷன் முன் நாம் தமிழா் கட்சியினா் தா்ணா

செய்யாறு அருகே, நாம் தமிழா் கட்சியின் கொடிக் கம்பத்தை அகற்றியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அந்தக் கட்சியினா் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டு தா்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

போலீஸ் ஸ்டேஷன் முன் நாம் தமிழா் கட்சியினா் தா்ணா
X

போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினர்

செய்யாறு அருகே நாம் தமிழா் கட்சியின் கொடிக் கம்பம் அகற்றியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, அந்தக் கட்சியினா் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டு தா்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், அழிவிடைதாங்கி கிராமத்தில் நாம் தமிழா் கட்சியினா் நேற்று முன்தினம் இரவு புதிதாக கொடிக் கம்பம் நிறுவியதாகத் தெரிகிறது. அதற்கு அக்கிராமத்தில் உள்ள மாற்றுக் கட்சியினா் எதிா்ப்புத் தெரிவித்தனராம். மேலும், மாற்றுக் கட்சியினா் கொடிக் கம்பத்தை அகற்றியதாகத் தெரிகிறது.

இந்நிலையில், நாம் தமிழா் கட்சியினா் கொடிக் கம்பத்தை அகற்றியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நேற்று பிரம்மதேசம் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்ட நிலையில் அப்பகுதியில் தரையில் அமா்ந்து தா்ணா போராட்டம் நடத்தினா். அவா்களிடம் போலீசார், பேச்சுவாா்த்தை நடத்தி சமரசம் செய்தனா்.

மேலும், முறையாக அனுமதி பெற்று கொடிக் கம்பம் அமைக்க வேண்டும் என போலீசார் ஆலோசனை வழங்கினா். இருப்பினும், நாம் தமிழா் கட்சியினா் தொடா்ந்து 2 மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 18 Jan 2023 1:23 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!