போக்குவரத்து கழக தொழிற்சங்க கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்
திருநெல்வேலியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் தொழிலாளர்களுக்கான விடுப்பு விதிகளை மாற்ற கூடாது ,சம்பளத்தை பறிக்கக்கூடாது, வார ஓய்வை பறிக்கக்கூடாது, என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வண்ணாரப்பேட்டை தாமிரபரணி டெப்போ முன்பு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தொ.மு.ச மாநில அமைப்பு செயலாளர் தர்மன் தலைமை தாங்கினார், கோரிக்கைகளை விளக்கி சிஐடியு போக்குவரத்து தொழிற்சங்க பொருளாளர் ஜோதி, சிஐடியு மாவட்ட பொருளாளர் பெருமாள், ஏஐடியுசி பொது செயலாளர் உலகநாதன், எச்.எம்.எஸ்.மாநில துணைத் தலைவர் சுப்ரமணியன்,டி.டி.எஸ்.எப் பொதுச் செயலாளர் சந்தானம், சிஐடியு காமராஜ் ஆகியோர் பேசினார்கள்.
ஆர்ப்பாட்டத்தில் தொ.மு.ச சார்பில் முருகேசன்,முருகன் ,ஏஐடியுசி சார்பில் ஜெயக்குமார், ராஜாமணி ,எச்எம்எஸ் சார்பில் பாலகிருஷ்ணன் ,மனோகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். மகாவிஷ்ணு நன்றி கூறினார்.முன்னதாக இதே கோரிக்கைகளை வலியுறுத்தி வண்ணார்பேட்டை புறவழிச்சாலை டெப்போ முன்பு அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்திற்கு தொ.மு.ச தஸ்தகீர் தலைமை தாங்கினார்.ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாவட்ட பொருளாளர் பெருமாள்,சிஐடியு போக்குவரத்து தொழிலாளர் சங்க மாவட்ட பொதுச்செயலாளர் ஜோதி ,பாலகிருஷ்ணன் மற்றும் தொமுச சிஐடியு, ஏஐடியுசி,ஐ.என்.டி.யு.சி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.