/* */

எம்ஜிஆர் 105வது பிறந்தநாள்: நெல்லை மாவட்ட அதிமுகவினர் மரியாதை

நெல்லையில் எம்ஜிஆரின் 105வது பிறந்தநாளை, அதிமுகவினர் உற்சாகமுடன் கொண்டாடி வருகின்றனர்.

HIGHLIGHTS

எம்ஜிஆர் 105வது பிறந்தநாள்: நெல்லை மாவட்ட அதிமுகவினர் மரியாதை
X

நெல்லையில் எம்ஜிஆரின் 105வது பிறந்த நாளையொட்டி,  அதிமுக மாவட்ட செயலாளர் தச்சை-கணேசராஜா தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

புரட்சி தலைவரும், அதிமுக நிறுவனருமான டாக்டர் எம்ஜிஆரின் 105 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா, இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு, நெல்லை கொக்கிரகுளம் பகுதியில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் முழு உருவப்படத்திற்கு, திருநெல்வேலி அதிமுக மாவட்ட செயலாளர் தச்சை-என். கணேசராஜா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியின் போது, அதிமுக அமைப்பு செயலாளர்கள் கருப்பசாமி பாண்டியன், சுதா கே பரமசிவன், கழக அம்மா பேரவை துணைச் செயலாளர் ஜெகநாதன், எம் ஜி ஆர் மன்ற இணைச் செயலாளர் கல்லூர் வேலாயுதம், மாவட்ட அவைத் தலைவர் பரணி சங்கரலிங்கம், மாவட்ட மகளிரணி செயலாளர் ஜான்சிராணி, தெண்மண்டல இணை செயலாளர் விக்னேஷ் ,அம்மா பேரவை செயலாளர் ஜெரால்ட் ,அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளர் சிவந்தி மகாராஜேந்திரன் நாங்குநேரி முன்னால் சட்டமன்ற உறுப்பினர் ரெட்டியார்பட்டி நாராயணன், நெல்லை பகுதி அம்மா பேரவை செயலாளர் சீனி முகம்மது சேட், வட்ட செயலாளர் ஜி பி மணி, நெல்லை மேற்கு பகுதி வாகை மணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 17 Jan 2022 7:44 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மகர ராசிக்கு எப்படி இருக்கும்?
  2. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: தனுசு ராசிக்கு எப்படி இருக்கும்?
  3. லைஃப்ஸ்டைல்
    தர்பூசணி, ஏன் அளவோடு உண்ணவேண்டும்? தெரிஞ்சுக்கங்க..!
  4. லைஃப்ஸ்டைல்
    காதல் கடந்து போகாது...! கூடவே பயணிக்கும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய்..அன்பே..அன்பே..!
  6. குமாரபாளையம்
    குமாரபாளையம் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  7. காஞ்சிபுரம்
    மர்மமான முறையில் 9 கால்நடைகள் உயிரிழப்பு ?
  8. வீடியோ
    ஜூன் மாதம் நடவிருக்கும் அதிரடி | அடுத்தடுத்து சிக்கும் திமுக...
  9. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: விருச்சிக ராசிக்கு எப்படி இருக்கும்?
  10. குமாரபாளையம்
    வக்கீல்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு..!