/* */

கூட்டணியால் தான் திராவிட கட்சிகள் வெற்றி- ஜவாஹிருல்லா கண்டு பிடிப்பு

1967 ல் இருந்து கூட்டணியால் தான் திராவிட கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன என ஜவாஹிருல்லா கூறி உள்ளார்.

HIGHLIGHTS

கூட்டணியால் தான் திராவிட கட்சிகள் வெற்றி- ஜவாஹிருல்லா கண்டு பிடிப்பு
X

மனித நேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா.

தமிழகத்தில் 1967 முதல் கூட்டணியால் திராவிட கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன என நெல்லையில் மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா கூறினார்.

நெல்லை மேலப்பாளையம் பகுதியில் மனிதநேய மக்கள் கட்சியின் மாமன்ற உறுப்பினர் அலுவலகம் திறப்பு விழா இன்று நடைபெற்றது. மனிதநேய மக்கள் கட்சி மாநில தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா இந்த விழாவில் கலந்து கொண்டு மாமன்ற உறுப்பினர் அலுவலகத்தை திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறியதாவது:-

சென்னை மாநகராட்சியில் இருப்பது போல நெல்லை மாநகராட்சி மாமன்ற அனைத்து உறுப்பினர்களுக்கும் மாநகராட்சி சார்பிலே ஒரு வார்டு அலுவலகம் அமைக்கப்பட வேண்டும். இதனை முதலமைச்சர் கவனத்தில் கொள்ள வேண்டும். தமிழகத்தில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 25 தொகுதிகளை கைப்பற்றும் என அக்கட்சியின் தலைவர்கள் கூறுவது தமிழகத்தில் பலிக்காது. தி.மு.க. கூட்டணி வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளையும் கைப்பற்றும். அந்த கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சிக்கு நிச்சயம் இடம் இருக்கும்.

திராவிட கொள்கை என்பது அனைவரையும் அரவணைத்து செல்லக்கூடிய ஒரு கொள்கை. திராவிட கட்சி 1967 முதல் முறையாக வெற்றி பெற்றதில் இருந்து கூட்டணி அடிப்படையில் தான் வெற்றி பெற்றுள்ளது. அனைவருடன் அனைவருக்குமான வளர்ச்சி என்று மோடி சொல்கிறார் .ஆனால் அதானி போன்ற தனிநபர் வளர்ச்சி தான் மோடி உடைய கொள்கை. பட்டியல் இன மக்கள் , தாழ்த்தப்பட்ட மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து அவர்களுடைய வளர்ச்சி தான் திராவிட மாடல். மோடி ஆட்சியில் சாதாரண மக்கள் சாமானிய மக்கள் மிகப்பெரிய அளவில் வஞ்சிக்கப்பட்டுள்ளனர் . ஜி.எஸ்.டி. மூலம் வணிகர்கள் வஞ்சிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு ஜவாஹிருல்லா கூறினார்.

Updated On: 2 Jan 2023 12:33 PM GMT

Related News