/* */

கூடங்குளம் அருகே 50 மதுபாட்டில்கள் பறிமுதல் - வாக்களர்களுக்கு சப்ளை?

வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்பவர்களுக்கும், வாக்காளர்களுக்கும் மதுபாட்டில்கள் சப்ளை செய்வதாக புகார் வந்தது.

HIGHLIGHTS

கூடங்குளம் அருகே  50 மதுபாட்டில்கள் பறிமுதல் - வாக்களர்களுக்கு சப்ளை?
X

நெல்லை மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலின் முதல்கட்ட தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில் நேற்று முதல் மதுபான கடைகள் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு அடைக்கப்பட்டன. இந்த நிலையில் கூடங்குளத்தை அடுத்த சங்கநேரி கிராமத்தில் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்பவர்களுக்கும், வாக்காளர்களுக்கும் மதுபாட்டில்கள் சப்ளை செய்யப்பட்டு வருவதாக தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து கூடங்குளம் போலீசார் சங்கநேரி பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்ட போது 3 பேர் பிரச்சாரத்திற்கு வந்தவர்களுக்கும், வாக்காளர்களுக்கும் மது பாட்டில்கள் சப்ளை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது.

உடனடியாக போலீசார் அவர்களை சுற்றி வளைக்க முயன்ற போது இருவர் தப்பி ஓடினர். ஜெபராஜ் என்பவர் மட்டும் போலீசாரிடம் சிக்கினார். அவரிடம் இருந்து 50 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் தப்பி ஓடிய சங்கநேரியை சேர்ந்தசங்கர் (31) மைக்கேல் ராஜ் (35) என 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Updated On: 5 Oct 2021 2:10 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    பல்லடம்; மருத்துவா்களுக்கான ‘மெடி அப்டேட்’கருத்தரங்கு
  2. திருவண்ணாமலை
    அருணாசலேஸ்வரா் கோவிலில் குவிந்த பக்தா்கள்
  3. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் வரும் 4 ம் தேதி முதல் தாராபிஷேகம்
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை
  5. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  6. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  7. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  8. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  9. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  10. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’