தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் வருவாய் அலுவலர் கண்ணபிரான் தலைமையில் நடைபெற்றது.
HIGHLIGHTS
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான் தலைமையில் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான் தலைமையில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகை, வீட்டுமனைப்பட்டா, பட்டா பெயர் மாற்றம், கல்விக்கடன், தொழிற்கடன் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வேண்டிய கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை, மாவட்ட வருவாய் அலுவலர் பொதுமக்களிடமிருந்து பெற்றுக்கொண்டார்.
மேலும் முதலமைச்சரின் தனி பிரிவு மனுக்கள் மற்றும் நீண்ட நாள் மனுக்களுக்கு தனி கவனம் செலுத்தி மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள். முன்னதாக மாவட்ட வருவாய் அலுவலர் மாற்றுத்திறனாளிகளின் இருப்பிடங்களுக்கு சென்று கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பொது அமுதா, மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் பரிமளா, மகளிர் திட்ட திட்ட இயக்குநர் வீரபத்திரன், உதவி ஆணையர் (கலால்) செல்வநாயகம் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.