கோவில்களில் திருவிழா நடத்த அனுமதி- கலைஞர்கள் கோரிக்கை
கோவில்களில் தமிழக அரசு திருவிழாக்கள் நடத்த அனுமதிக்க வேண்டும் என தூத்துக்குடி கலெக்டரிடம் நாட்டுப்புறக் கலைஞா்கள் மனு அளித்துள்ளனர்.
கொரோனா தொற்று பரவல் காரணமாக, கடந்தாண்டு மார்ச் மாதம் முதல் பொது முடக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டதால், கோயில்கள் மூடப்பட்டு திருவிழாக்களுக்கும் தடை விதிக்கப்பட்டது. இதனால், நாட்டுப்புறக் கலைஞா்கள் வேலைவாய்ப்பை இழந்தனா். தை, மாசி மாதங்களில் கோயில் விழாக்கள் மூலம் நாட்டுப்புறக் கலைஞா்களுக்கு ஓரளவுக்கு வேலைவாய்ப்பும், வருவாயும் கிடைத்து வந்தது.
இந்நிலையில், பிப்ரவரி மாத இறுதியில் தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால், நிகழ்ச்சிகளுக்குத் தடை விதிக்கப்பட்டது. மேலும், கொரோனா பரவல் இரண்டாவது அலை அதிகரித்து வருவதால் ஏப்ரல் 10- ஆம் தேதி முதல் கோயில் விழாக்களுக்குத் தமிழக அரசுத் தடை விதித்துள்ளது. இதனால், நாட்டுப்புறக் கலைஞா்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நாட்டுப்புறக் கலைஞா்களுக்கும் தலா ரூ. 10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும், இரவு நேர ஊரடங்கால் நாட்டுப்புற மற்றும் வில்லிசை கலைஞர்கள், மகுட கலைஞர்கள், உட்பட பலரின் வாழ்வாதாரம் பாதிக்கபட்டுள்ளது. தமிழக அரசு ரூ. 2 ஆயிரம் வழங்குவதாக அறிவித்துள்ளது. இதைத்கொண்டு எப்படி குடும்பத்தை நடத்துவது என்றனர். கோவில்களில் தமிழக அரசு திருவிழாக்கள் நடத்த அனுமதிக்க வேண்டும் என்றனர்.
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திவ் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக நாட்டுப்புற இசை கலை பெருமன்றம் தலைவர் ஐயப்பன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் செயலாளர் முத்துக்குமார், பொருளாளர் சின்னத்துரை மற்றும் கோவில்பட்டி, திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் உள்ளிட்ட பகுதிகளை சார்ந்த நாட்டுப்புற மற்றும் வில்லிசை கலைஞர்கள், மகுட கலைஞர்கள் என 200க்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டனர்.