/* */

தூத்துக்குடி முத்து நகர் கடற்கரையில் பேரிடர் ஒத்திகை பயிற்சி

தூத்துக்குடி முத்து நகர் கடற்கரையில் கலெக்டர் செந்தில்ராஜ் தலைமையில் வடகிழக்கு பருவமழை தொடர்பாக பேரிடர் ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.

HIGHLIGHTS

தூத்துக்குடி முத்து நகர் கடற்கரையில் பேரிடர் ஒத்திகை பயிற்சி
X

தூத்துக்குடியில் நடந்த பேரிடர் மீட்பு ஓத்திகை நிகழ்ச்சியை கலெக்டர் பார்வையிட்டார்.

தூத்துக்குடி முத்து நகர் கடற்கரையில் தீயணைப்பு-மீட்பு பணித் துறை மற்றும் வருவாய் பேரிடர் துறை சார்பில் மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ், தலைமையில் 2021ம் ஆண்டு வடகிழக்கு பருவமழை தொடர்பாக பேரிடர் போலி ஒத்திகை பயிற்சி இன்று (09.09.2021) நடைபெற்றது.

நிகழ்ச்சியில் ஆட்சியர் தெரிவித்ததாவது: வடகிழக்கு பருவமழையில் ஏற்படும் பேரிடரின் போது எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கைக நடவடிக்கை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்


தமிழகம் முழுவதும் பேரிடர் போலி ஒத்திகை பயிற்சி நடத்த தீயணைப்பு-மீட்பு பணித் துறை இயக்குநர் கரன்சின்கா, உத்தரவின் பேரில், தென் மண்டல துணை இயக்குநர் ந.விஜயகுமார் அவர்களது ஆலோசனையின் பேரில் வருவாய் துறையினருடன் தீயணைப்பு-மீட்பு பணி துறையினர் இனைந்து பேரிடர் ஒத்திகை பயிற்சி இன்று நடத்தப்பட்டது.

இதில் பேரிடர் மற்றும் அவசர காலங்களில் வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு தங்களை வெள்ள அபாயங்களிலிருந்து காப்பாற்ற உரிய பயிற்சிகள் வழங்கப்பட்டது.

தீயணைணப்பு-மீட்பு பணித் துறையின் மீட்பு உபகரணங்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டது. மீட்பு உபகரணங்களின் பயன்பாடுகள் மற்றும் அவைகளின் செயல்பாடுகள் குறித்து பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு எடுத்து கூறப்பட்டது.

தீயணைப்பு-மீட்பு பணித் துறைக்கு வழங்கப்பட்ட இஞ்சினுடன் கூடிய இரப்பர் படகுகளில் தீயணைப்பு-மீட்பு பணித் துறை பணியாளர்கள் கடலுக்கு சென்று கடலில் சிகியவர்களை மீட்கும் செயல்முறை விளக்க பயிற்சிகளும் தூத்துக்குடி நிலைய பணியாளர்கள் மற்றும் தீயணைப்பு-மீட்பு பணித்துறையின் தூத்துக்குடி மாவட்டத்தைச் சார்ந்த கமாண்டோ தீயணைப்போர்களால் செய்து காண்பிக்கப்பட்டது.

வருவாய் துறை மற்றும் தீயணைப்பு-மீட்பு பணி துறை மூலம் மாவட்டம் முழுவதும் இதுபோன்று பேரிடர் போலி ஒத்திகை பயிற்சி நடத்தப்படும் என தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் தீயணைப்பு-மீட்பு பணித் துறை தூத்துக்குடி மாவட்ட அலுவலர் ச.குமார், உதவி மாவட்ட அலுவலர் த.முத்துபாண்டியன், நிலைய அலுவலர்கள் ஜோ.சகயாராஜ், து.அருள் ராஜ், ம.சுந்தர் ராஜ் மற்றும்; பொதுமக்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 9 Sep 2021 5:24 PM GMT

Related News

Latest News

  1. மாதவரம்
    கார் ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த மூவர் கைது
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் மே தின கொண்டாட்டங்கள்
  4. ஈரோடு
    கோடை வெயில்: ஈரோட்டில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.25-க்கு விற்பனை
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தொமுச சார்பில் மாபெரும் மே தின ஊர்வலம்
  6. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 46 கன அடியாக சரிவு
  7. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27 கன அடியாக சரிவு
  8. திருவண்ணாமலை
    அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நடராஜருக்கு சித்திரை மாத சிறப்பு அபிஷேகம்
  9. நாமக்கல்
    காந்தமலை முருகன் மற்றும் செல்வ விநாயகர் கோயில்களில் குரு பெயர்ச்சி...
  10. நாமக்கல்
    திருச்செங்கோடு பகுதியில் நோய் தாக்கி கரும்பு பயிர் பாதிப்பு: இழப்பீடு...