/* */

கோடை வெயில்: ஈரோட்டில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.25-க்கு விற்பனை

கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், ஈரோட்டில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.25 வரை விற்பனை செய்யப்படுகிறது.

HIGHLIGHTS

கோடை வெயில்: ஈரோட்டில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.25-க்கு விற்பனை
X

எலுமிச்சை பழங்கள்.

கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், ஈரோட்டில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.25 வரை விற்பனை செய்யப்படுகிறது.

தமிழ்நாட்டிலேயே ஈரோட்டில் தான் அதிக அளவில் வெயில் பதிவாகி வருகிறது. இதனால், பகல் நேரத்தில் அனல் காற்று வீசுவதால், சாலைகள் மற்றும் வீதிகளில் ஆட்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி கிடக்கிறது. மேலும், இருசக்கர வாகனங்களில் வெளியே சென்றால் முகத்தில் வெந்நீரை ஊற்றியது போல் உள்ளது.

வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் உடலுக்கு குளிச்சி தரும் உணவுகளை எடுத்து வருகின்றனர். குறிப்பாக பழச்சாறு, கம்பங்கூழ், எலுமிச்சைச் சாறு போன்றவற்றை தினந்தோறும் குடித்து வருகின்றனர். இந்நிலையில், ஈரோடு நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட்டுக்கு தினமும் 4 டன் வரை வரத்தான எலுமிச்சை பழம், தற்போது ஒரு டன்னுக்கும் குறைவாகவே வருகிறது.

வெயிலின் தாக்கம் மற்றும் வரத்து குறைவு எதிரொலியாக எலுமிச்சை பழம் கிடுகிடுவென விலை உயர்ந்துள்ளது. நேற்று ஒரு கிலோ ரூ.210-க்கு விற்பனை ஆனது. இதேபோல், ஒரு எலுமிச்சை பழம் ரூ.6, ரூ.7-க்கு விற்பனையான நிலையில் , தற்போது ரூ.20 முதல் ரூ.25 வரை விற்பனை செய்யப்படுகிறது.

Updated On: 2 May 2024 3:48 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான உடல் திடத்தைப் பெற இத ஃபாலோ பண்ணுங்க..!
  2. ஆன்மீகம்
    பரசுராம் ஜெயந்தி 2024 - நாள், நேரம், சிறப்புகள் என்னென்ன தெரியுமா?
  3. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே ,தென்கரை உச்சி மாகாளியம்மன் ஆலய விழா..!
  4. வீடியோ
    Vijay-யுடன் ரகசிய சந்திப்பு | வெளிப்படையாக பதில் சொன்ன Seeman |...
  5. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  6. காஞ்சிபுரம்
    சிலாம்பாக்கம் தடுப்பணை பணிகள் 50சதவீதம் நிறைவு..!.
  7. இராஜபாளையம்
    இராஜபாளையம் அருகே ,போலீஸாரிடமிருந்து தப்பிக்க முயன்றவர்களுக்கு கை,...
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்பக் காய்ச்சும் பால்: நன்மையா? தீமையா?
  9. லைஃப்ஸ்டைல்
    நகைச்சுவையான பிறந்தநாள் வாழ்த்துகளின் தொகுப்பு..!
  10. காஞ்சிபுரம்
    பள்ளி பேருந்தில் பயணிப்போர் நம் குழந்தைகள் என எண்ண வேண்டும்..!