/* */

கைகளை இழந்ததால் திருவாரூர் கலெக்டரிடம் வாயால் மனு அளித்த மாற்றுத்திறனாளி

கைகளை இழந்ததால் மாற்றுத்திறனாளி திருவாரூர் மாவட்ட கலெக்டரிடம் தான் கொண்டு வந்த மனுவை வாயால் அளித்தார்.

HIGHLIGHTS

கைகளை இழந்ததால் திருவாரூர் கலெக்டரிடம் வாயால் மனு அளித்த  மாற்றுத்திறனாளி
X

திருவாரூர் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் மாற்றுத்திறனாளி முதியவர் வாயால் அளித்த மனுவை  கருணையுடன் பெற்றார்.

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதிலும் இருந்து பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் மனுவாக அளித்தனர்.அதனை மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் அந்தந்த துறை அதிகாரிகளிடம் அனுப்பி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

அப்போது மின் வாரியத்தில் பணிபுரிந்து இரு கைகளையும் இழந்த புதுக்குடி பகுதியை சேர்ந்த சண்முகவேலு என்ற மாற்றுத்திறனாளி தனக்கு இலவச வீடு வழங்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார். மின்சார வாரியத்தில் பணி புரிந்த காலத்தில் தனது இரு கைகளையும் இழந்த சண்முகவேலு தனது வாயால் மனுவை மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பித்தார்.

உடனடியாக மாவட்ட ஆட்சியர் துறை அதிகாரிகளை அழைத்து அவருக்கு வீடு வழங்க தகுதி இருக்கிறதா என்பதை ஆய்வு செய்து தேவையான தகுதிகள் இருந்தால் உடனடியாக வீடு வழங்க உத்தரவிட்டார்.

Updated On: 18 Oct 2021 10:37 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தலைமுடி வளர்ச்சிக்கு இனிமேல் முட்டையை பயன்படுத்துங்க!
  2. திருவண்ணாமலை
    விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட வாலிபர் தற்கொலை முயற்சி!
  3. லைஃப்ஸ்டைல்
    ஆயுத பூஜை: உழைப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் உன்னத நாள்
  4. ஆன்மீகம்
    அன்பிற்கும் அமைதிக்கும் வழிவகுக்கும் ரமலான்
  5. ஆரணி
    பாலியல் தொல்லை வழக்கில் விடுதி வார்டனுக்கு 20 ஆண்டு ஜெயில்!
  6. வீடியோ
    😭தேம்பி தேம்பி அழுத பள்ளி மாணவி | | ஆறுதல் சொன்ன Annamalai |...
  7. வீடியோ
    DMK-வில் புல்லுருவிகளை களையெடுக்க மீண்டும் இறக்கப்படுகிறார் Prashant...
  8. லைஃப்ஸ்டைல்
    ‘இன்று போல் என்றும் வாழ்க’ - 25வது திருமண ஆண்டு வாழ்த்துகள்
  9. லைஃப்ஸ்டைல்
    அண்ணா அண்ணிக்கு அன்பு நிறைந்த திருமண நாள் வாழ்த்துகள்...!
  10. ஆன்மீகம்
    தமிழில் நட்சத்திர பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோம்!