Begin typing your search above and press return to search.
மாநகராட்சி பகுதிகளில் இரண்டு நாட்கள் தண்ணீர் நிறுத்தம்
தஞ்சாவூர் மாநகர பகுதிகளில் இரண்டு நாட்களுக்கு தண்ணீர் நிறுத்தப்படுவதாக மாநகராட்சி அறிவித்துள்ளது.
HIGHLIGHTS
தஞ்சாவூர் மாநகராட்சி பகுதிகளுக்கு திருமானூர் தலைமை நீரேற்று நிலையத்தில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் குடிநீர் வழங்கும் பிரதான குழாய்களில் நான்கு இடங்களில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி வருகிறது.
எனவே பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தஞ்சாவூர் மாநகராட்சிக்குட்பட்ட வார்டு எண்.1 முதல் 51 வரையிலான அனைத்து வார்டுகளிலும் நாளை மற்றும் நாளை மறுதினம் ஆகிய 2 நாட்கள் குடிநீர் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் தேவையான அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ளவும், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்தவும் மாநகராட்சி சார்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.