Begin typing your search above and press return to search.
தஞ்சாவூர் மாவட்டத்தில் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிய பிரதான சாலைகள்
தஞ்சாவூர் மாவட்டத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் மக்கள் நடமாட்டமின்றி பிரதான சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.
HIGHLIGHTS
தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல் தஞ்சை மாவட்டத்தில் உள்ள மாவட்ட எல்லையான 8 இடங்களில் வாகன சோதனைகள் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் மாவட்டம் முழுவதும் 89 இடங்களிலும் காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளர். தஞ்சை மாவட்டத்தில் பிரதான சாலைகளில் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
மருந்தகம், பெட்ரோல் நிலையம் உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் மட்டுமே திறந்து இருக்கின்றனர். அம்மா உணவகம் திறக்கப்பட்டுள்ளதால் ஏழை எளிய மக்கள் அங்கு உணவருந்தி வருகின்றனர்.
இந்நிலையில் மாவட்டம் முழுவதும் முழு ஊரடங்கு இருந்தாலும், காவல்துறையினர் கெடுபிடிகள் இல்லாததால் மக்களின் இயல்பாகவே சாலைகளில் வந்து செல்கின்றனர்.