Begin typing your search above and press return to search.
தஞ்சையில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை: போலீசார் விசாரணை
தஞ்சையில் வாலிபர் ஒருவர் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
HIGHLIGHTS
தஞ்சையில் வாலிபர் ஒருவர் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தஞ்சை தோப்புக்குளம் தெற்கு பூக்கொல்லை பகுதியை சேர்ந்தவர் அன்பு (34). கடந்த 3 மாதத்துக்கு முன்பு விபத்தில் சிக்கினார். இதனால் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்து வந்தார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத போது அன்பு தூக்கு மாட்டி கொண்டார்.
தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அன்புவின் மனைவி சண்முகப்பிரியா தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.