/* */

தஞ்சையில் பூட்டிய வீடுகளில் கொள்ளையடித்த கும்பல் கைது

கர்நாடக மாநில வனப்பகுதியில் பதுங்கி இருந்தபோது கொள்ளை கும்பலை தஞ்சாவூர் தனிப்படை போலீசார் கைது செய்தனர்

HIGHLIGHTS

தஞ்சையில் பூட்டிய வீடுகளில் கொள்ளையடித்த கும்பல்  கைது
X

வனப்பகுதியில் பதுங்கி இருந்த  கொள்ளையர்களை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்

தஞ்சை மாவட்டத்தில் பூட்டி இருந்த வீடுகளில் கொள்ளை சம்பவங்கள் கடந்த நான்கு மாதங்களாக நடைபெற்று வந்தது. இதையடுத்து மாவட்ட எஸ்.பி ரவளிப்பிரியா தனிப்படை அமைத்து கொள்ளையர்களை பிடிக்க உத்தரவிட்டார். அதன்பேரில் தனிப்படை உதவி ஆய்வாளர் ராஜேஷ்குமார் தலைமையில் 7 பேர் கொண்ட போலீசார் கொள்ளை நடந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு கொள்ளைக் கும்பலை தேடி வந்தனர்.

தனிப்படைக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் முக்கிய குற்றவாளியான தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பனவடலிசத்திரத்தைச் சேர்ந்த கொடுங்க சாமி என்பவரை கர்நாடக மாநிலம் மைசூர் அருகே ஒரு வனப்பகுதியில் பதுங்கி இருந்தபோது தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

மேலும் அவனுடன் பதுங்கியிருந்த கூட்டாளி பெங்களூரை சேர்ந்த மோகன்குமார் என்பவரையும் மடக்கிப் பிடித்தனர். மேலும் இவர்களுக்கு கொள்ளையடிக்க உதவிய தஞ்சை மாவட்டம் நெடாரை சேர்ந்த தியாகராஜன் என்ற சொட்டை தியாகராஜன் மற்றும் திருச்சி துவாக்குடி அருகே உள்ள வாழவந்தான் கோட்டை பெரியார் நகரைச் சேர்ந்த நாகராஜ் ஆகியோரையும் கைது செய்தனர்.

மேலும் விசாரணையில், தஞ்சையில் தங்கியிருந்து இவர்கள் தஞ்சை வல்லம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பூட்டியிருந்த 15-க்கும் மேற்பட்ட வீடுகளை உடைத்து நகை, பணம் மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

இதில் முக்கிய குற்றவாளியான கொடுங்க சாமி மீது கிட்டத்தட்ட 50-க்கும் மேற்பட்ட கொள்ளை மற்றும் திருட்டு, வழிப்பறி வழக்குகள் உள்ளது. இவனுக்கு கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தமிழ்நாடு முழுவதும் திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது. மேலும் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 50 பவுன் தங்க நகை மற்றும் ரூ 5 லட்சம் ரொக்கம் ஒரு கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதையடுத்து கைது செய்யப்பட்ட 4 பேரையும் தனிப்படை போலீசார் தஞ்சை மருத்துவகல்லூரி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 4 Feb 2022 4:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள்..!
  2. வீடியோ
    ஆதரவு திரட்டும் OPS | கொங்கில் வலுவிழக்கும் Edappadi | O Panneerselvam...
  3. லைஃப்ஸ்டைல்
    இந்த மீன்களை சாப்பிட்டா கொலஸ்ட்ரால் குறையுமாம்..!
  4. ஈரோடு
    ஈரோடு ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில் வைகாசி விசாகத் தேரோட்டம்
  5. ஈரோடு
    முள்ளிவாய்க்கால் நினைவு தினம்: ஈரோட்டில் மெழுகுவர்த்தி ஏந்தி
  6. லைஃப்ஸ்டைல்
    தமிழில் திருமண நாள் நல்வாழ்த்துக்கள்
  7. இந்தியா
    பாஜக-வின் பிளான் B என்ன?
  8. இந்தியா
    பாஜக - காங்கிரஸ் யாருக்கு வெற்றி? தரவுகள், கள நிலவரம் சொல்வது என்ன?
  9. தமிழ்நாடு
    இப்படி ஒரு ரயில் நிலையம் கேள்விப்பட்டிருக்கீங்களா..?
  10. இந்தியா
    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் பாஜ தலைவர் கொல்லப்பட்டார்..!