/* */

குடோனில் பதுக்கி வைத்திருந்த 1,500 நெல்மூட்டைகள் பறிமுதல்

உரிய ஆவணங்கள் இன்றி குடோனில் பதுக்கி வைத்திருந்த, 1,500 நெல்மூட்டைகள் மற்றும் இரண்டாயிரம் சாக்குகள் கைப்பற்றப்பட்டன.

HIGHLIGHTS

தஞ்சாவூர் - ஆலக்குடி சாலையில், முனியம்பட்டி சாய்பாபா நகர் அமைந்துள்ளது. இந்த பகுதியில் வல்லத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான குடோன் உள்ளது. இந்நிலையில் இந்த குடோனில் உரிமம் இல்லாமல் 1,500 நெல் மூட்டைகள், 2000 சாக்குகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல முதுநிலை மேலாளர் உமாமகேஸ்வரிக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் அவரது தலைமையில், மேலாளர் ராமமூர்த்தி, தாசில்தார் பாலசுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் வல்லம் போலீசாரை அழைத்து கொண்டு சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். ஆனால் அங்கு குடோன் பூட்டப்பட்டிருந்தது. இதையடுத்து பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே சென்று பார்த்த போது, நெல் மூட்டைகள், சாக்குகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவைகள் அனைத்தும் லாரிகளில் ஏற்றப்பட்டு மேலவஸ்தாசாவடியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இது குறித்து வல்லம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள குடோன் உரிமையாளரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Updated On: 20 July 2021 9:30 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  2. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  3. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  4. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  5. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  6. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  8. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  9. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  10. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு