Begin typing your search above and press return to search.
புத்தாண்டையொட்டி தஞ்சாவூர் மாவட்டத்தில் ரூ.4.62 கோடிக்கு மது விற்பனை
ஆங்கிலப்புத்தாண்டையொட்டி தஞ்சை மாவட்டத்தில் டாஸ்மாக்கில் ரூ.4.62 கோடிக்கு மது விற்பனை.
HIGHLIGHTS
தமிழகத்தில் தீபாவளி, பொங்கல், ஆங்கிலப் புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகை காலங்களில் டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை வழக்கத்தைவிட அதிகளவில் நடைபெறுவது வழக்கம்.
தஞ்சை மாவட்டத்தில் 156 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் விதமாக மது பிரியர்கள் காலை முதல் டாஸ்மாக் கடைகளில் குவிந்தனர். மாலையில் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. பல்வேறு மதுபான வகைகளை வாங்கி சென்றனர்.
தஞ்சை மாவட்டத்தில் மட்டும் ஒரே நாளில் ரூ.4 கோடியே 62 லட்சத்து 5 ஆயிரத்து 940-க்கு மதுபானங்கள் விற்பனை ஆனது. இது கடந்த ஆண்டை விட ரூ.7 லட்சத்து 52 ஆயிரம் கூடுதல் என்பது குறிப்பிடத்தக்கது.