Begin typing your search above and press return to search.
தஞ்சை அருகே வெந்நீர் ஊற்றி கணவன் கொலை: மனைவி கைது
தஞ்சையை அடுத்துள்ள ஆலக்குடியை சேர்ந்தவர் விவசாயி சின்னையன் (62) . இவருடைய மனைவியின் பெயர் வீரம்மாள் வயது (55). கடந்த 10ஆம் தேதி இரவு சின்னையன் வீரம்மாள் இடையே பிரசாசனை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த வீரம்மாள் வீட்டில் அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்த வெந்நீரை எடுத்து வந்து சின்னையா மீது ஊற்றி உள்ளார். இதில் உடல் முழுவதும் படுகாயத்துடன் உயிருக்கு போராடியவரை அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர் .இந்நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து வல்லம் போலீஸார் வழக்கு பதிவு வீரம்மாளை கைது செய்தனர்.