/* */

தேசிய நெடுஞ்சாலையில் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிய டிராக்டர் மீது பேருந்து மோதல்

தேசிய நெடுஞ்சாலை நடுவே உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்றி கொண்டிருந்த, டிராக்டர் மீது அரசு பேருந்து மோதி விபத்து. டிரைவர் உட்பட 14 பேர் காயம்.

HIGHLIGHTS

தேசிய நெடுஞ்சாலையில் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிய    டிராக்டர் மீது பேருந்து மோதல்
X

தஞ்சாவூர் அடுத்த வளம்பக்குடியில், தஞ்சாவூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், சாலையின் நடுவே உள்ள செடிகளுக்கு தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான டிராக்டர் தண்ணீர் ஊற்றி கொண்டிருந்தது. அப்போது தஞ்சையில் இருந்து திருச்சி சென்ற கொண்டிருந்த அரசு பேருந்து சாலையின் நடுவே தண்ணீர் ஊற்றி கொண்டிருந்த டிராக்டரின் பின்பக்கம் எதிர்பாராத விதமாக மோதி விபத்துகுள்ளனாது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை. அரசு பேருந்தின் ஓட்டுநர் மோகன் மற்றும் பேருந்தில் பயணம் செய்த 14 பயணிகள் காயம் அடைந்தனர். மேலும் காயமடைந்தவர்களை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து செங்கிப்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 9 May 2022 2:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...