/* */

தஞ்சையில் சித்தி விநாயகர் கோயில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு

தஞ்சையில் சித்தி விநாயகர் கோயில் உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்டது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

தஞ்சையில் சித்தி விநாயகர் கோயில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
X

உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருட்டு போன  கோவில்.

தஞ்சை குந்தவை நாச்சியார் மகளிர் கல்லூரி எதிரே உள்ள கண்ணன் நகரில் சித்தி விநாயகர் கோவில் உள்ளது. தற்போது ஊரடங்கால் வார இறுதி 3 நாட்களில் வழிபாட்டு தலம் மூடப்படும் என்பதால் இந்த கோவில் மூடப்பட்டிருந்தது. கோவில் வெளிக்கதவு இரும்பு கேட்டில் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்கு வசதியாக குடம் உண்டியல் வைக்கப்பட்டிருந்தது.

அதில் பக்தர்கள் காணிக்கை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று அதிகாலை கோயிலுக்கு வந்த குருக்கள், உண்டியல் உடைந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.இதனையடுத்து அங்கு பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்த போது, மர்ம நபர் ஒருவர் இன்று அதிகாலை முகத்தில் முண்டாசு கட்டி கொண்டு, உண்டியலை உடைத்து, பணத்தை திருடி செல்லும் காட்சி பதிவாகியுள்ளது.

இது குறித்து தஞ்சை தெற்கு காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 9 Jan 2022 10:54 AM GMT

Related News

Latest News

  1. வாகனம்
    வரே வா...வரப்போகுது ராயல் என்ஃபீல்டு கொரில்லா 450..! எக்கச்சக்க...
  2. இந்தியா
    மம்தா பானர்ஜிக்கு பாரத் சேவாஷ்ரம் சங்க துறவி நோட்டீஸ்
  3. டாக்டர் சார்
    அமைதியான எதிரி..! அமைதியான மாரடைப்பு..! உஷாரா இருக்கணும்ங்க..!
  4. அரசியல்
    'மேற்கு வங்க காங்கிரசை காப்பாற்றுவதே எனது போராட்டம்': கார்கேவிற்கு...
  5. உலகம்
    ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் உயிரிழப்பு..!
  6. விளையாட்டு
    ஆர்சிபி வீரர்களுடன் கைகுலுக்குவதைத் தவிர்த்த தோனி! தேடிசென்று...
  7. இந்தியா
    ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் ஆகியோர் பேரணியில் பேசாமல் வெளியேறியது...
  8. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 318.30 மி.மீ மழை பதிவு