தஞ்சையில் சித்தி விநாயகர் கோயில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
தஞ்சையில் சித்தி விநாயகர் கோயில் உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்டது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
HIGHLIGHTS
தஞ்சை குந்தவை நாச்சியார் மகளிர் கல்லூரி எதிரே உள்ள கண்ணன் நகரில் சித்தி விநாயகர் கோவில் உள்ளது. தற்போது ஊரடங்கால் வார இறுதி 3 நாட்களில் வழிபாட்டு தலம் மூடப்படும் என்பதால் இந்த கோவில் மூடப்பட்டிருந்தது. கோவில் வெளிக்கதவு இரும்பு கேட்டில் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்கு வசதியாக குடம் உண்டியல் வைக்கப்பட்டிருந்தது.
அதில் பக்தர்கள் காணிக்கை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று அதிகாலை கோயிலுக்கு வந்த குருக்கள், உண்டியல் உடைந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.இதனையடுத்து அங்கு பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்த போது, மர்ம நபர் ஒருவர் இன்று அதிகாலை முகத்தில் முண்டாசு கட்டி கொண்டு, உண்டியலை உடைத்து, பணத்தை திருடி செல்லும் காட்சி பதிவாகியுள்ளது.
இது குறித்து தஞ்சை தெற்கு காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.