/* */

தஞ்சை மாநகராட்சியில் 75-வது சுதந்திர திருநாள் அமுத பெருவிழா கண்காட்சி

தஞ்சை மாநகராட்சி மாநககராட்சி மைதானத்தில் 75-வது சுதந்திர திருநாள் அமுத பெருவிழா கண்காட்சி துவக்கி வைக்கப்பட்டது.

HIGHLIGHTS

தஞ்சை மாநகராட்சியில் 75-வது சுதந்திர திருநாள் அமுத பெருவிழா கண்காட்சி
X

கண்காட்சியை தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பார்வையிட்டார்.

தஞ்சை மாநகராட்சி மைதானத்தில் 75-வது "சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழா"வையொட்டி செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் நடந்த புகைப்பட கண்காட்சியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார். இதில் அரசு தலைமை கொறடா கோவி.செழியன், மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசும்போது தஞ்சை மாவட்டத்தில் 75-வது சுதந்திர தின விழா - சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழாவை கொண்டாடும் பொருட்டு அமைக்கப்பட்டுள்ள பல்துறை பணிவிளக்கக் கண்காட்சியில் தமிழக அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்த வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, பள்ளிக்கல்வித்துறை உட்பட பல்வேறு துறைகளின் சார்பில் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன என்றார்.

Updated On: 16 April 2022 11:00 AM GMT

Related News