சுதாகரன், இளவரசிக்கு சொந்தமான சொத்துகள் பறிமுதல்
தஞ்சாவூரில் சசிகலா உறவினர்கள் சுதாகரன், இளவரசிக்கு சொந்தமான சொத்துகளை தமிழக அரசு பறிமுதல் செய்துள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் 2017-ம் ஆண்டு உச்சநீதிமன்றம், பெங்களூரு சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்தது. இதனால் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை உறுதியானது. இந்த சிறை தண்டனையை நிறைவு செய்த சசிகலா, இளவரசி ஆகியோர் விடுதலையாகினர்.
இந்நிலையில் உச்சநீதிமன்ற தீர்ப்பின் கீழ் இளவரசி, சுதாகரனின் சொத்துக்கள் பலவற்றை தமிழக அரசு அதிரடியாக பறிமுதல் செய்து வருகிறது. நேற்று காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இருவருக்கும் சொந்தமான மேலும் சில சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, தஞ்சை வ.உ.சி.நகர் பகுதியில் உள்ள 26,540 சதுர அடி காலி மனையை அரசு இன்று பறிமுதல் செய்துள்ளது.