Begin typing your search above and press return to search.
தென்காசி மாவட்டத்தில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் 2 பேர் கைது
தென்காசி மாவட்டத்தில் கலெக்டர் உத்தரவின் பேரில் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
HIGHLIGHTS
தென்காசி மாவட்டம் ஆய்க்குடி பகுதியை சேர்ந்தவர் பாண்டியராஜ். இவர் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்தார். இதேபோல் கடையநல்லூரைச் சேர்ந்த முகமது மைதீன் இவரும் தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தார்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் 2 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய பரிந்துரைத்தார். மாவட்ட ஆட்சியர் சுந்தர கோபால் ராஜ் இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.