/* */

ரூ.10 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் 2 பேர் கைது

தென்காசியில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது; இது தொடர்பாக, .2 பேர் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

ரூ.10 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் 2 பேர் கைது
X

தென்காசி நகரில், தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல்கள் கிடைத்துள்ளது. இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் தென்காசி அணைக்கரை தெரு பகுதியில், ஒரு வாகனத்தில் இருந்து மற்றொரு வாகனத்திற்கு, குட்கா பொருட்களை மாற்றி கொண்டிருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனை தொடர்ந்து, தென்காசி காவல் ஆய்வாளர் பாலமுருகன், உதவி ஆய்வாளர் கற்பகராஜ் மற்றும் காவல்துறையினர் அந்த இடத்திற்கு விரைந்தனர். அப்போது தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை மாற்றிக் கொண்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. காவல்துறையினர் அங்கிருந்த, தென்காசியை சேர்ந்த ரமேஷ் பட்டேல், திருப்பத்தூரை சேர்ந்த அமரேஷ் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள குட்கா மற்றும் புகையிலை பொருட்கள், 2 மினி லாரிகள் அந்த லாரியில் இருந்த ஜிபிஎஸ் கருவி ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

Updated On: 26 Nov 2021 1:00 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?