/* */

கூடுதல் வகுப்பறை கட்ட அடிக்கல் நாட்டிய தென்காசி எம்எல்ஏ

MLA News -சட்டமன்ற உறுப்பினர் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 18 .70 லட்சம் ஒதுக்கீடு செய்தார்

HIGHLIGHTS

MLA News | Tenkasi News
X

 தென்காசி மாவட்டம், கொண்டலூரில் கூடுதல் வகுப்பறைக்கு அடிக்கல் நாட்டிய தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார்.

MLA News -தென்காசி மாவட்டம், கொண்டலூரில் அரசு தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை வேண்டுமென அப்பகுதி மக்கள் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடாரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து, கூடுதல் வகுப்பறை கட்டுவதற்கு, சட்டமன்ற உறுப்பினர் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 18 .70 லட்சம் ஒதுக்கீடு செய்தார். இதனைத் தொடர்ந்து இன்று கூடுதல் வகுப்பறை கட்டுவதற்காக, சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் அடிக்கல் நாட்டினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி மன்ற உறுப்பினர் சுப்பிரமணியன், கீழப்பாவூர் ஒன்றிய பெருந்தலைவர் காவேரி, ஒன்றிய உறுப்பினர் ராம உதயசூரியன், ஒப்பந்ததாரர் அன்பரசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 29 Sep 2022 8:42 AM GMT

Related News