அரசு பள்ளியில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை
Government School News - சுரண்டை அரசு பள்ளியில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியரிடம் எம்எல்ஏ பழனி நாடார் மனு.
HIGHLIGHTS
Government School News -தென்காசி சட்டமன்ற உறுப்பினரும், காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவருமான பழனி நாடார் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு ஒன்று அளித்தார். அதில் கூறப்பட்டிருப்பதாவது:
தற்போது தென்காசி மாவட்டத்தில் பரவலாக பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. சுரண்டை சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள அரசு பள்ளியில் தண்ணீர் தேங்ககூடிய சூழ்நிலை உள்ளது. மேலும் மழை காலம் வருவதற்கு முன்பு அதனை சரிசெய்ய வேண்டும். பள்ளி சுற்று சுவர் மோசமாக இருப்பததால் அதனை சரி செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் . இந்நிகழ்ச்சியில் மாநில செயலாளர் செல்வராஜ், மாவட்ட பொருளாளர் முரளி ராஜா, மாநில பேச்சாளர் பால்துரை, நகரப் பொருளாளர் ஈஸ்வரன் உட்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2