தென்காசி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்: மழை வெள்ள பாதிப்புகளுக்கு உதவி எண் அறிவிப்பு
மழை வெள்ள பாதிப்புகளுக்கு 04633 – 290548 என்ற எண்ணில் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் என தென்காசி மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்தார்.
HIGHLIGHTS
சென்னை வானிலை மையத்திலிருந்து தென்காசி மாவட்டத்திற்கு 01.08.2022 முதல் 04.08.2022 முடிய மிக பலத்த மழைக்கான எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. எனவே தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லவும் ஆறு மற்றும் குளங்களில் நீர்வரத்து அதிகமாக வாய்ப்பு உள்ளதால் கரையோரத்தில் வசிக்கும் மக்கள் உரிய எச்சரிக்கையுடனும் பாதுகாப்புடனும் இருந்திட அறிவுறுத்தப்படுகிறது. தெரியாத ஆழமும், நீரோட்டமும் உள்ள தண்ணீருக்குள் செல்ல வேண்டாம். மேற்சொன்ன காலங்களில் இடி, மின்னல் ஏற்பட வாய்ப்புள்ளதால் விவசாய தொழிலாளர்கள் ஆடு, மாடு மேய்ப்பவர்கள், இடி மின்னலின் போது வெட்ட வெளியில் நடக்க வேண்டாம் என்றும், மரங்களுக்கு கீழ் பாதுகாப்பிற்காக ஒதுங்க வேண்டாம் என்றும், பெருமழையின் போது காய்ச்சிய குடிநீரினையே பருகி நோயிலிருந்து தங்களை காத்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறது. மேலும் மழை வெள்ள பாதிப்புகளுக்கு 04633 – 290548 என்ற எண்ணில் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் என தென்காசி மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் கேட்டுக்கொண்டுள்ளார்.