தென்காசி மாவட்டத்தில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்
தென்காசி மாவட்டத்தில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் விவரம் வருமாறு:
HIGHLIGHTS
வருகிற 25-01-2022 அன்று கீழப்பாவூர், மங்கம்மாள்சாலை மற்றும் அச்சன்புதூர் உபமின்நிலையங்களில்மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இதனால் கீழப்பாவூர், மங்கம்மாள்சாலை மற்றும் அச்சன்புதூர் உபமின்நிலையங்களில் 25-01-2022 செவ்வாய்க்கிழமை காலை 09:00 மணி முதல் மதியம், 02:00 மணி வரை மின்விநியோகம் தடை செய்யப்படும். எனவே கீழ்கண்ட ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளிலும் மின்விநியோகம் இருக்காது.
கீழப்பாவூர் உப மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகள்: பாவூர்சத்திரம், கீழப்பாவூர், மேலப்பாவூர், குறும்பலாபேரி, நாட்டார்பட்டி, ஆவுடையானூர், வெய்காலிப்பட்டி, சின்னநாடானூர், திப்பணம்பட்டி, செட்டியூர், பெத்தநாடார்பட்டி, கரிசலூர், செல்லத்தாயார்புரம், பூலாங்குளம், கோவிலூற்று, மகிழ்வண்ணநாதபுரம், அடைக்கலபட்டிணம்.
அச்சன்புதூர் உபமின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகள்: வடகரை, அச்சன்புதூர், நெடுவயல், வாவாநகரம், காசிதர்மம், பண்பொழி, மேக்கரை, கரிசல்குடியிருப்பு.
மங்கம்மாள்சாலை உபமின்நிலையத்திற்குட்பட்ட பகுதிகள்: தென்காசி புதிய பேரூந்து நிலையம், மங்கம்மாள்சாலை பகுதிகள், சக்தி நகர், காளிதாசன் நகர், ஹவுசிங் போர்டு காலனி, கீழப்புலியூர். ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.