தென்காசி ஆட்சியர் அலுவலகம் முன்பு கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலம் முன்பு கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
HIGHLIGHTS
தென்காசி மாவட்டத்தில் தனியார் கோழி வளர்ப்பு நிறுவனங்கள் நியாயமற்ற முறையில் செயல்படுவதாக கூறி கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் 100க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தென்காசி மாவட்டத்தில் 500க்கும் மேற்பட்ட கறிக் கோழி வளர்க்கும் பண்ணைகள் உள்ளது. கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகளுக்கு தனியார் நிறுவனங்கள் மூலம் கோழிக்குஞ்சுகள் வழங்கப்பட்டு அதை வளர்த்து கோழியாக நிறுவனத்திற்கு கொடுப்பதற்கான கூலி கடந்த 10 வருடங்களாக உயர்த்தி வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனை கண்டித்து கறிக்கோழி வளர்ப்பு பண்ணையாளர் விவசாய சங்கம் சார்பில் 100க்கும் மேற்பட்டோர் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு ஆட்சியர் கோபால சுந்தரராஜிடம் மனு அளித்தனர்.
இதுதொடர்பாக அவர்கள் கூறுகையில், கோழி வளர்ப்பதற்கான மூலப்பொருட்கள் விலை, வேலையாட்கள் ஊதியம் ஆகியவை உயர்ந்துள்ளது. இருந்தபோதிலும் கோழி வளர்ப்பதர்கான கூலி 6.50 பைசாவில் மட்டுமே உள்ளதால் அதனை ரூ.12 ஆக உயர்த்தி நிரந்தரமாக வழங்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர். இல்லையெனில் 29-ஆம் தேதியில் இருந்து காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாகவும் தெரிவித்துள்ளனர்.