மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்!
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்..!
HIGHLIGHTS
சென்னையில் போராட்டம் நடத்திவரும் எம்ஆர்பி செவிலியருக்கு ஆதரவாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கொரோனா கால நிலையில் பல்வேறு இடர்பாடுகளுக்கிடையே தங்கள் பணிகளை திறன் பட செயலாற்றிய எம்.ஆர்.பி செவிலியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
எம்.ஆர்பி.செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி MRB செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில் சென்னை மருத்துவக் கல்வி இயக்கம் வளாகத்தில் செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் போராட்டம் நடத்திய எம்.ஆர்.பி செவிலியர்களை அராஜகமான முறையில் காவல்துறை கைது செய்ததை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் எம்.ஆர்.பி செவிலியர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்தும் அவர்களை உடனே விடுதலை செய்யவும் வலியுறுத்திப்பட்டது.
மேலும் தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.