தென்காசி: மத்திய அரசை கண்டித்து விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
தென்காசியில் மத்திய அரசை கண்டித்து விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
HIGHLIGHTS
இன்று நாடு முழுவதும் விவசாய சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணி நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தென்காசி மாவட்டம், குத்துக்கல்வலசை பகுதியில் இருந்து, புதிய பேருந்து நிலையம் வரை விவசாய சங்கத்தினர் ஊர்வலமாக வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தனர்.
ஆனால் மழையின் காரணமாக குத்துக்கல்வலசை பகுதியில் மட்டும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, சிஐடியு மாவட்ட செயலாளர் வேல்முருகன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.
மத்திய அரசு வேளாண் சட்டத்தை உடனடியாக நாடாளுமன்றத்தில் திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்து இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தென்காசி சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான விவசாய சங்கத்தினர் கலந்து கொண்டனர்.