/* */

தென்காசி: மத்திய அரசை கண்டித்து விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தென்காசியில் மத்திய அரசை கண்டித்து விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

தென்காசி: மத்திய அரசை கண்டித்து விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
X

தென்காசியில் போராட்டத்தில் ஈடுபட்ட சிஐடியு விவசாய சங்கத்தினர். 

இன்று நாடு முழுவதும் விவசாய சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணி நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தென்காசி மாவட்டம், குத்துக்கல்வலசை பகுதியில் இருந்து, புதிய பேருந்து நிலையம் வரை விவசாய சங்கத்தினர் ஊர்வலமாக வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தனர்.

ஆனால் மழையின் காரணமாக குத்துக்கல்வலசை பகுதியில் மட்டும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, சிஐடியு மாவட்ட செயலாளர் வேல்முருகன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.

மத்திய அரசு வேளாண் சட்டத்தை உடனடியாக நாடாளுமன்றத்தில் திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்து இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தென்காசி சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான விவசாய சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

Updated On: 26 Nov 2021 6:30 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  2. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  3. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  4. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  5. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  6. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  8. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  9. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  10. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?