Begin typing your search above and press return to search.
சுரண்டை நகராட்சியாக தரம் உயர்வு: இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.
சுரண்டை நகராட்சியாக தரம் உயர்வு செய்ததற்கு பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி காங்கிரஸ் கட்சியினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
HIGHLIGHTS
தென்காசி மாவட்டம் சுரண்டை பகுதி பேரூராட்சியாக உள்ளது. இதனை நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டுமென அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
அதே போல் சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடாரும் கோரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில் நேற்று சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் சுரண்டை பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்று அறிவித்தார்.
இந்த அறிவிப்பு சுரண்டையில் இருக்கும் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் இடையே வரவேற்பை பெற்றது. காங்கிரஸ் கட்சி சார்பில் சுரண்டை பேரூராட்சி அலுவலகம் முன்பு நகரத் தலைவர் ஜெயபால் தலைமையில் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர்