/* */

சுரண்டை நகராட்சியாக தரம் உயர்வு: இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.

சுரண்டை நகராட்சியாக தரம் உயர்வு செய்ததற்கு பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி காங்கிரஸ் கட்சியினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

சுரண்டை  நகராட்சியாக தரம் உயர்வு: இனிப்பு வழங்கி  கொண்டாட்டம்.
X

தென்காசி மாவட்டம் சுரண்டை பேரூராட்சி, நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதையொட்டி காங்கிரஸ் கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

தென்காசி மாவட்டம் சுரண்டை பகுதி பேரூராட்சியாக உள்ளது. இதனை நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டுமென அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

அதே போல் சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடாரும் கோரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில் நேற்று சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் சுரண்டை பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்று அறிவித்தார்.

இந்த அறிவிப்பு சுரண்டையில் இருக்கும் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் இடையே வரவேற்பை பெற்றது. காங்கிரஸ் கட்சி சார்பில் சுரண்டை பேரூராட்சி அலுவலகம் முன்பு நகரத் தலைவர் ஜெயபால் தலைமையில் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர்

Updated On: 26 Aug 2021 7:36 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  2. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  3. தொழில்நுட்பம்
    550 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள டிரிபிள்-ஸ்டார் சிஸ்டத்தை கைப்பற்றிய...
  4. உலகம்
    எகிப்தியர்கள் பிரமிடுகளை எவ்வாறு கட்டினார்கள் என்ற மர்மத்துக்கு...
  5. வீடியோ
    NO பருப்பு NO பாமாயில் எதனால் இந்த நிலைமை || #mkstalin #tngovt...
  6. இந்தியா
    அச்சம் தந்த அக்னி..! பயணிகள் பேருந்து தீவிபத்தில் 10 பேர் கருகி...
  7. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  8. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதையில் இருசக்கர வாகனத்தை திருட முயன்றவர்களை போலீசில்...
  9. திருவள்ளூர்
    திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு ஒத்திகை விழிப்புணர்வு...
  10. இந்தியா
    நடிகை ராஷ்மிகா பாராட்டு! பிரதமர் மோடி நெகிழ்ச்சி!