Begin typing your search above and press return to search.
வாக்குபதிவு இயந்திரங்கள் மையங்களுக்கு அனுப்பி வைப்பு
தென்காசி மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலையொட்டி 1884 வாக்குசாவடி மையங்களுக்கு வாக்கு இயந்திரங்கள் அனுப்பி வைக்கும் பணி நடைபெற்றது.
தமிழகத்தில் நாளை (6 ம் தேதி) சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி அந்தந்த மாவட்ட நிர்வாகம் சார்பில் தேர்தல் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தென்காசி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 1884 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 96 வாக்குச்சாவடிகள் பதட்டமானவையாக கண்டறியப்பட்டுள்ளது.
இதில் தாலுகா அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள வாக்குபதிவு இயந்திரங்கள் அந்தந்த வாக்கு சாவடி மையங்களுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் தலைமையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் காவல்துறை பாதுகாப்புடன் அனுப்பி வைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றது.