தேவேந்திரர்களை புறக்கணிக்கும் திமுகவை கண்டித்து ஆர்ப்பாட்டம்: தேவேந்திர பேனாக்கள்
தேவேந்திரர்களுக்கு ஒதுக்க வேண்டிய மூன்று வார்டுகளையும் காங்கிரஸ் கட்சிக்கு திமுக ஒதுக்கி உள்ளது கண்டிக்கத்தக்கது.
HIGHLIGHTS
தென்காசியில் தேவேந்திர பேனாக்கள் நிறுவனர் பாலசுந்தரம் செய்தவர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தமிழகம் முழுவதும் தற்போது 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று வருகிறது. தென்காசி மாவட்டத்தில் நடைபெறும் உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணியில் தேவேந்திரர்களுக்கு முக்கியத்துவம் தரப்படவில்லை. மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் பதவிக்கு 14 வார்டுகள் உள்ளது. இதில் இட ஒதுக்கீடு அடிப்படையில் மூன்று வார்டுகள் தேவேந்திரர்களுக்கு ஒதுக்க வேண்டும். ஆனால் அந்த மூன்று வார்டுகளையும் காங்கிரஸ் கட்சிக்கு திமுக ஒதுக்கி உள்ளது.
காங்கிரஸ் கட்சியினரும் அப்பகுதியில் தேவேந்திரர்களை வேட்பாளராக நிறுத்த வில்லை. மாவட்ட தலைவரும் தென்காசி எம்எல்ஏ.,விமான பழனி நாடார் திட்டமிட்டு தேவேந்திரர்களை புறக்கணிப்பது போல் தெரிகிறது. இதனை கண்டித்து விரைவில் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம். திமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் தேவேந்திர குலத்தை சேர்ந்த இளங்கோவன் மனைவிக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டது கண்டிக்கத்தக்கது. இம்மானுவேல் அஞ்சலி தினமான செப்டம்பர் 11ஆம் தேதியை அரசு விழாவாக கொண்டாட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.