Begin typing your search above and press return to search.
காங்கிரஸ் கட்சி சார்பில் கபசுரக் குடிநீர் வழங்கல்
தென்காசி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்டத் தலைவர் பழனி நாடார், பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் மற்றும் கபசுரக் குடிநீர் வழங்கினார்.
தென்காசியில் மாவட்ட காங்கிரஸ் மற்றும் நகர காங்கிரஸ் சார்பில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட காங்கிரஸ் தலைவர் பழனி நாடார் தலைமை தாங்கி அனைவருக்கும் கபசுரக் குடிநீர் வழங்கினார்.நிகழ்வில் தென்காசி நகர தலைவர் காதர் மைதீன் முன்னிலை வகித்தார். பொது மக்கள் அனைவருக்கும் நிலவேம்பு கசாயம், கபசுர குடிநீர் வழங்கபட்டது. நிகழ்ச்சியில் நகர இளைஞர் காங்கிரஸ் தலைவர் சந்தோஷ்,சபரி முருகேசன், கண்ணன், ஐமல், தியாகராசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.