வில்வித்தை போட்டியில் பரிசு வென்றவருக்கு பாராட்டு
இந்த மாணவர்கள் இந்தோனேஷியாவில் ஜுன் மாதம் நடைபெறும் சர்வதேச வில்வித்தை போட்டிகளில் கலந்து கொள்கின்றனர்.
HIGHLIGHTS
இந்திய தேசிய பீல்டு வில்வித்தை 2021-2022 ஆம் ஆண்டின் 11வது மற்றும் 12வது தேசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியானது மகராஷ்டிரா மாநிலம் ரெய்க்காட் மாவட்டத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் பங்கு பெற்ற தமிழக அணியுடன் தென்காசி மாவட்டத்தை சார்ந்த பின்வரும் மாணவர்கள் கலந்து கொண்டு வெற்றியை பெற்றுத் தந்தனர்.
1) ரா. பிரித்திவ் லிங் U-10 ஆண்கள் தங்கப்பதக்கம்
2) கோ.ஹரினி U 10 பெண்கள் தங்கப்பதக்கம் பெற்றனர்.
1)மு.பிரய்யுதா U-10 பெண்கள்
வெள்ளிப் பதக்கமும் பெற்று தென்காசி மாவட்டத்திற்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்த்தனர். இந்த மாணவர்கள் தென்காசி மாவட்ட வில்வித்தை செயலாளர் டாக்டர் வைரமுத்துவின் பயிற்சி மற்றும் வழிகாட்டுதலுடன் கலந்து கொண்டனர். மேலும் இந்த மாணவர்கள் இந்தோனேஷியாவில் ஜுன் மாதம் நடைபெறும் சர்வதேச வில்வித்தை போட்டிகளில் மேற்கண்ட பிரிவுகளில் கலந்து கொள்கின்றனர்.