/* */

உலக தாய்ப்பால் வாரவிழா பிரசார வாகனம்: கலெக்டர் தொடங்கி வைத்தார்

தென்காசியில் உலக தாய்ப்பால் வாரத்தையொட்டி விழிப்புணர்வு பிரசார வாகனத்தை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்

HIGHLIGHTS

உலக தாய்ப்பால் வாரவிழா பிரசார வாகனம்: கலெக்டர் தொடங்கி வைத்தார்
X

உலக தாய்ப்பால் வாரத்தையொட்டி விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை மாவட்ட ஆட்சியர் கோபால சுந்தர்ராஜ் தொடங்கி வைத்தார்

உலகத் தாய்ப்பால் வாரம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த தாய்ப்பால் வாரத்தில் தாய்ப்பால் கொடுப்பதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரங்கள், தாய்ப்பால் கொடுப்பதை ஊக்குவிப்பது உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.

அந்த வகையில் தென்காசி மாவட்ட புதிய பேருந்து நிலையத்தில் உலக தாய்ப்பால் வாரத்தையொட்டி விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை மாவட்ட ஆட்சியர் கோபால சுந்தர்ராஜ் தொடங்கி வைத்தார். இந்த வாகனத்தின் மூலம் விழிப்புணர்வு பாடல்கள், தாய் சேய் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வுகள், துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட தலைமை மருத்துவ அலுவலர் ஜெஸ்லின் மற்றும் பெண்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 10 Aug 2021 5:59 AM GMT

Related News