/* */

தென்காசி மாவட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 8 பேர் மனு தாக்கல்

தென்காசி மாவட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 8 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர்.

HIGHLIGHTS

தென்காசி மாவட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 8 பேர் மனு தாக்கல்
X

தென்காசி மாவட்டத்தில் 10 ஊராட்சி ஒன்றியங்களில் முதல் நாளான இன்று ஊராட்சி தலைவர் பதவிக்கு மட்டும் 8 பேர் வேட்புமனு தாக்கல்.

தமிழகத்தில் தேர்தல் நடைபெறாமல் இருந்த 9 மாவட்டங்களுக்கு ஊராக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு, இன்று முதல் வேட்பு மனு தாக்கல் துவங்கியது. ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான வார்டு உறுப்பினர் பதவி, ஊராட்சி தலைவர் பதவி, ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் பதவி, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கான வேட்பு மனு தாக்கல் இன்று காலை 10 மணிக்கு துவங்கி மாலை 5 மணி வரை நடந்தது.

தென்காசி மாவட்டத்தில் உள்ள 10 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 221 ஊராட்சி தலைவர் பதவி, 1905 வார்டு உறுப்பினர் பதவி, 144 ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் பதவி, 14 மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் நடைபெற இருக்கிறது. இன்று பெரும்பாலான இடங்களில் வேட்பு மனுக்கள் மட்டுமே வாங்கி சென்றனர்.

தென்காசி ஒன்றியம் மத்தாளம்பாறை ஊராட்சி தலைவர் பதவிக்கு ஒருவரும், ஆலங்குளம் ஒன்றியம் வாடியூர் ஊராட்சி தலைவர் பதவிக்கு 2 பேரும், குறிஞ்சாப்பட்டி ஊராட்சி தலைவர் பதவிக்கு 2 பேரும், மேலநீலிதநல்லூர் ஒன்றியம் சேர்ந்தமரம் கஸ்பா ஊராட்சி தலைவர் பதவிக்கு ஒருவர், கீழப்பாவூர் ஒன்றியத்தில் ஊராட்சி தலைவர் பதவிக்கு 2 பேர் என மாவட்டத்தில் மொத்தம் 8 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

தென்காசி புதிய மாவட்டமாக இருக்கும் நிலையில் ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்துவதில் மாவட்ட நிர்வாகமும், உள்ளாட்சி துறை அதிகாரிகளும் மெத்தன போக்கை கடைப்பிடித்து வருவதால் தென்காசி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்துவதில் பெரும் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது.

(தகவல் : மாவட்ட நிர்வாகத்தின் குளறுபடியால் தகவல்கள் தாமதமாக வந்துள்ளது)

Updated On: 15 Sep 2021 5:25 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    DMK-வின் மூன்றாண்டு ஆட்சி எல்லா பக்கமும் கள்ளச்சாராயம் கஞ்சா தான்...
  2. லைஃப்ஸ்டைல்
    தங்கை திருமண நாள் வாழ்த்துக்கள்: மனதைத் தொடும் வாழ்த்துச் செய்திகள்
  3. லைஃப்ஸ்டைல்
    மூன்று முடிச்சால் இரண்டு மனங்கள் ஒரு மனதாகும் திருமணம்..!...
  4. லைஃப்ஸ்டைல்
    திருமண நாள் வாழ்த்துக்களின் வகைகளும் மேற்கோள்களும்
  5. வீடியோ
    சிறை கண்காணிப்பாளர் தான் என் கையை உடைத்தார்- SavukkuShankar !...
  6. லைஃப்ஸ்டைல்
    அம்மாவின் பிறந்தநாளில் அன்பின் அலைகள்!
  7. சேலம்
    மேட்டூர் அணை நீர்மட்டம் 50.78 அடியாக சரிவு..!
  8. வீடியோ
    🔴LIVE : சிறை தான் உனக்கு சமாதி என காவல் துறை மிரட்டல் சவுக்கு சங்கர்...
  9. கோவை மாநகர்
    சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தான் என் கையை உடைத்தார்: சவுக்கு...
  10. தேனி
    தேனியில் குப்பை சேகரிக்கும் பணி: இந்து எழுச்சி முன்னணி அதிருப்தி