கொரோனாவில் உயிர் இழந்தவர்களுக்கு யோகா மூலம் அஞ்சலி
கடையநல்லூர்- கொரோனாவில் உயிரிழந்தவர்களுக்கு யோகாசனம் மூலம் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது
HIGHLIGHTS
இன்று சர்வதேச யோகா யோகா தினம் உலகெங்கும் கடைபிடிக்கப்படுகிறது. கொரோனா பரவல் காரணமாக இம்முறை சிறப்பு யோகா நிகழ்வுகளை வீட்டில் இருந்தபடியே மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் உலக யோகாசன தினத்தை முன்னிட்டு கொரோனாவை தடுப்பதற்கு மூச்சுப் பயிற்சியின் அவசியத்தை வலியுறுத்தியும், கொரோனாவில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தீபம் மூலம் யோகாசனம் நநடைபெற்றது.
தனியார் பள்ளியின் தாளாளரும், ரோட்டரி கிளப் ஆப் கோல்டன் முன்னாள் தலைவருமான முகம்மது ஹபீபு தனது கை, கால், தலையில் அகல்விளக்கில் தீபம் ஏற்றி கொரோனாவை தடுப்பதற்கு மூச்சுப் பயிற்சியின் அவசியத்தை வலியுறுத்தியும், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய வேண்டியும் சிறப்பு யோகாசனங்களை செய்து காண்பித்தார்.
இவர் ஏற்கனவே 3.30 மணி நேரம் தொடர் உடற்பயிற்சி உலக சாதனையும், புஜங்காசனம் மூலம் இரண்டாவதாக உலக சாதனையும், மத்திய அரசின் நேரு யுவகேந்திரா மூலம் துரோனோச்சாரியார் விருதும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.