/* */

காவல்துறை, எல்லை பாதுகாப்பு படை கொடி அணிவகுப்பு

காவல்துறை, எல்லை பாதுகாப்பு படை கொடி அணிவகுப்பு
X

தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் தென்காசி நகர் பகுதியில் காவல்துறையினர், எல்லை பாதுகாப்பு படையினரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற உள்ளது. இந் நிலையில், பொதுமக்கள் அச்சமின்றி பாதுகாப்பான முறையில் வாக்களிக்க வலியுறுத்தும் விதமாகவும், பதற்றமான பகுதிகளை கண்டறிந்து அப்பகுதியில் காவல்துறையினர் மற்றும் துணை இராணுவப் படையினர் கொடி அணிவகுப்பு நடத்துவது வழக்கம். அதன் ஒரு பகுதியாக தென்காசி நகர் பகுதியில் காவல்துறையினர் மற்றும் எல்லை பாதுகாப்பு படை சார்பில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

இதனை தென்காசி மாவட்ட எஸ்பி சுகுணாசிங் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தென்காசி துணை கண்காணிப்பாளர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் அணிவகுப்பு நடைபெற்றது. அணிவகுப்பு தென்காசி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று தென்காசி காவல்நிலையத்தை அடைந்தது. அணிவகுப்பில் எல்லை பாதுகாப்பு படையினர் மற்றும் காவல்துறையினர் 200 பேர் கலந்து கொண்டனர்.

Updated On: 6 March 2021 8:15 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. போளூர்
    தேசிய திறனறி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
  4. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  5. நாமக்கல்
    மோகனூர் சர்க்கரை ஆலையில் ஓய்வுபெற்ற அலுவலர்கள் முற்றுகை போராட்டம்
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  7. ஆன்மீகம்
    இன்று முதல் அக்னி நட்சத்திரம் தொடக்கம்! என்ன செய்யலாம்? எதை...
  8. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் இன்று முதல் தாராபிஷேகம்
  9. திருவண்ணாமலை
    அரசின் வளர்ச்சி திட்ட பணிகள், ஒப்பந்ததாரராக பதிவு செய்ய மாவட்ட...
  10. செய்யாறு
    வேதபுரீஸ்வரர் கோயில் உண்டியல் காணிக்கை 2 லட்சத்து 97 ஆயிரம்