கீழப்பாவூரில் தனியார் நிறுவன வேலைவாய்ப்பு முகாம்
இதில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்திற்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்ய இருக்கின்றனர்.
HIGHLIGHTS
தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டம், தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் வரும் 10/11/2021 புதன் கிழமை அன்று கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ள தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்க கட்டிடத்தில் வைத்து நடைபெற இருக்கிறது.
இதில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்திற்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்ய இருக்கின்றனர். ஆகவே கிராம பகுதியில் உள்ள இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் இதில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர். மாத ஊதியமாக ரூபாய் 5000 முதல் ரூபாய் 17500 வரை கல்வித் தகுதிக்கு ஏற்ப வழங்கப்படுகிறது.
கல்வித்தகுதி: 10th, 12th, ITI, Diploma, Degree, BEd
வயது வரம்பு : 18- 40
பணியிடங்கள் : தென்காசி, நெல்லை, நாகர்கோயில் மற்றும் சென்னை.
மேலும் தகவலுக்கு தொடர்பு கொள்ள 9487815409, 9489049410